Wednesday, May 6, 2009

ஈழ வரலாறும் பொன்னியின் செல்வனும்

இன்று நேற்றல்லாது காலம் காலமாக இந்தியாஈழ வரலாற்றிலும் ஈழப் போர்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பங்களிப்புக்களை செய்து வந்துள்ளதுஇதில் சில தமிழருக்கு சாதகமாக இருந்த போதிலும் பல ஈழத் தமிழருக்கு பாதகமாக அமைந்தன என்பது எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும் ஈழத் திருநாட்டையும் தன ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே அன்றும் சரி இன்றும் சரி இந்தியத் தலைமைத்துவம் காய் நகர்த்தி வருகின்றது சிங்களமன்னனுக்கு பாண்டிய நாட்டு மன்னர்கள் படை உதவி செய்வது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.இலங்கைக்கு முதல் முதலாக குடிபெயர்ந்ததாக மகா வம்சம் குறிப்பிடும் விஜயன் மதுரையில் இருந்து பாண்டி நாட்டு இளவரசியை வரவழைத்து திருமணம் முடித்ததாகவும் குறிப்பிடுகின்றது சோழர்கள் பக்கச் சார்பாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வனில் பாண்டிய நாட்டவர்கள் மற்றும் அவர்தம் ஆபத்துதவிகள் ஒரு மறைத் தன்மையாகவே சித்தரிக்கப் பட்டுள்ளனர்.ஈழத்தில் ராஜ ராஜனின் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டனவா இல்லை வழங்கப் பட்டனவா என்பது இன்னும் என் மனதில் தீராத சந்தேகமாகவே உள்ளது !!!தமிழ் மன்னனின் ஆட்சியின் கீழ் எவ்வாறு இன வெறியர்கள் காலம் தள்ளினர் என்பதுவும் விடை காண முடியாத கேள்வியாகவே உள்ளது

No comments:

Post a Comment