Tuesday, February 10, 2009

முதல் பதிவு

கருணைக் கணபதி
காலடி போற்றி
காலனை வென்று
காலத்தை வென்று
கருத்தினை வென்று
கணமும்-உன்
தாழ் பணிந்து
அன்னை தமிழே
நின் புகழ் பாட
எனக்கோர்
வழி சொல்வாய்
வலிகள் மறந்து-புது
வாழ்க்கை தொடங்க
தயை கூர்வாய்

எழுத்தில் பிழை உண்டு
நானறிவேன்
எழுதிட ஆர்வமும் உண்டு
மடல் காணும் அன்பர்கள்
மனம் கனிந்து
என் பிழைபொறுத்து
கன்னியாய் தொடங்கிய
இம்முயற்சி
முற்றுப்புள்ளியாய்அமையாமல்
தொடர் குறியாய்
அமைய
அருள்வீர் !!!

1 comment:

வேத்தியன் said...

//எழுதிட ஆர்வமும் உண்டு//

இது போதும்...
முன்னேற வாழ்த்துகள்...

Post a Comment