கருணைக் கணபதி
காலடி போற்றி
காலனை வென்று
காலத்தை வென்று
கருத்தினை வென்று
கணமும்-உன்
தாழ் பணிந்து
அன்னை தமிழே
நின் புகழ் பாட
எனக்கோர்
வழி சொல்வாய்
வலிகள் மறந்து-புது
வாழ்க்கை தொடங்க
தயை கூர்வாய்
எழுத்தில் பிழை உண்டு
நானறிவேன்
எழுதிட ஆர்வமும் உண்டு
மடல் காணும் அன்பர்கள்
மனம் கனிந்து
என் பிழைபொறுத்து
கன்னியாய் தொடங்கிய
இம்முயற்சி
முற்றுப்புள்ளியாய்அமையாமல்
தொடர் குறியாய்
அமைய
அருள்வீர் !!!
Tuesday, February 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//எழுதிட ஆர்வமும் உண்டு//
இது போதும்...
முன்னேற வாழ்த்துகள்...
Post a Comment